சோசலிச சமத்துவக் கட்சி, உலக சோசலிசப் புரட்சிக்காக போராடுகின்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாகும். சோசலிச சமத்துவக் கட்சியானது இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி தெற்காசியாவிலும் மற்றும் முழு பூகோளத்திலும் சோசலிசக் குடியரசை அமைப்பதன் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசு என்ற வடிவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமொன்றுக்காக போராடுகின்றது.
சமுதாயத்தை சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்வதற்கான போராட்டமானது, தம்மைச் சூழ ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டிக்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியும். அதேபோது அனைவரருக்கும் சமாதானம் மற்றும் உண்மையான ஜனநாயகத்தையும் உத்தரவாதம் செய்ய முடியும். இன்று 70,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், இலட்சக்கணக்கானோர் தடுப்பு முகாங்களில் தள்ளப்பட்டும், ஏதுமில்லாதவர்களாக்கப்பட்டதன் மூலம் சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகள் துன்பியலான முறையில் சரியென வரலாற்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே அனைத்து வகையான முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் அதன் ஏஜன்டுகளிடம் இருந்தும் உழைக்கும் மக்களின் சுயாதீனமான அணிதிரட்டலுக்காக போராடுகின்றது.
உள்நாட்டு யுத்தத்தை இடைவிடாது எதிர்த்ததோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை திருப்பியழைக்க கோரிய ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.
இந்த புரட்சிகர முன்னோக்கை முன்னெடுத்துச் செல்வதற்காகவே இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக விஜே டயஸ் போட்டியிடுகிறார். எமது பிரச்சாரத்தில் பங்குபற்றுமாறும் உங்களது வாக்குகளையும் ஆதரவையும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இந்த முன்னோக்கை உங்களது குடும்பத்தவர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்துமாறும் அழைப்புவிடுக்கின்றோம்.
உலக மற்றும் உள்நாட்டு அரசியல், பொருளாதாரம், வரலாறு, விஞ்ஞானம், கலை மேலும் பல செய்திகளையும் ஆய்வுகளையும் தமிழ் உட்பட 13 மொழிகளில் வாசிக்க உலக சோசலிச வலைத் தளத்தை http://www.wsws.org/ ஐ பார்வையிடுங்கள்.
dimanche 10 janvier 2010
Inscription à :
Publier les commentaires (Atom)

Aucun commentaire:
La publication de nouveaux commentaires n'est pas autorisée.